பிரான்ஸ் அதிபர் அறிவிப்பால் மருந்து கடைகளில் அலைமோதும் கூட்டம்; எதற்காக தெரியுமா?
மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய மற்றும் அடிப்படையான விசயங்களுக்கு, முன்னுரிமை கொடுக்கும் நாடுகளின் மத்தியில் பிரான்ஸ் அரசாங்கம் வித்தியாசம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதாவது , பிரான்சில் வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம் வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
இதுபற்றி அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறும்கையில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மருந்தகங்களில் இருந்து இலவச காண்டங்களை பெற்று கொள்ளலாம்.
இந்த நடைமுறை வருகிற புது வருடத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். 2023 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூறிய நிலையில் , அவரது இந்த அறிவிப்புக்கு சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
அது என்ன 18 வயது என்ற அளவீடு? அதற்கு கீழுள்ள வயதினருக்கு இந்த அறிவிப்பு என்னவானது? என்பன போன்று சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதனியடுத்து , 25 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து நபர்களுக்கும் இனி இலவச காண்டம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிபரின் இந்த பிரான்சில் உள்ள மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என கூறப்படுகிறது.