அம்மாவை கொலை செய்து சமைத்து தின்ற கொடூர மகன்! அதிர்ச்சியில் பொலிஸார்
ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த அல்பேட்டோ என்ற இளைஞர், தனது தாயை சுருக்கு கயிறு போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். அதன் பின்னர் சுமார் 1,000 சிறிய துண்டுகளாக அவரை வெட்டி தனது பிரிஜ்ஜில் வைத்து. ஒவ்வொரு நாளும் சிறிய துண்டை எடுத்து சமையல் செய்து உண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
போதாக் குறைக்கு வீட்டில் இருந்த நாய்க்கும் அந்த இறைச்சியை போட்டு வந்த நிலையில் அயலவர்கள் குறித்த பெண்ணைக் காணவில்லை என்று பொலிசாருக்கு கொடுத்த ரகசிய தகவலை அடுத்து பொலிசார் விரைந்து செயல்பட்டுள்ளார்கள்.
முதலில் பொலிசாரால் எதனையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் அவன் நடவடிக்கையில் ஒரு விதமான சைக்கோ தனம் தெரிந்துள்ளது. இதனை வைத்து அந்தக் கோணத்தில் விசாரணை செய்த வேளை பிரிஜ்ஜில் வெட்டிய பாகங்கள் இருந்ததையும் அதனை வெட்டி அவன் உணவு சமைத்து உண்ட விடையத்தையும் அறிந்த பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெரும்பாலும் அவனுக்கு மன நிலை சரியில்லாமல் போய் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதுடன், தாயை கொன்ற பின் செல்ஃபி எடுத்து இன்ஸ்ராகிராமில் பதிவேற்றியும் உள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.