பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்று திங்கட்கிழமை காலை (08) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தது, பின்னர் அவை விலக்கிக்கொள்ளப்பட்டன.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள சரங்கானியில் 17 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளால் ஏற்பட்டவை.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மானி பாக்கியோவின் சொந்த ஊரான 'ஜெனரல் சாண்டோஸ்' நகரில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.