பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் 33,630 பேருக்கு டெல்டா கொரோனா தொற்று உறுதி!
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கொரோனா 33,630 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை அந்த நாட்டில் பரவும் கொரோனா வகைகளைக் கண்காணித்து வரும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு (பிஹெச்இ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வராந்திர அறிக்கையில்,
பிரித்தானியாவில் கென்ட் பகுதியில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகைக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைவிட டெல்டா வகைக் கொரோனா பாதித்த நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33,630 புதிய நேயாளிகளையும் சோத்து, டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 75,953-ஆக உயா்ந்துள்ளது.