ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை! மறுக்கும் ஈரானின் புதிய ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை(joe biden) சந்திக்க விரும்பவில்லை என, ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைஸி(Ebrahim Raisi) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி, ஜனாதிபதி பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில், 60 வயதான இப்ராஹிம் ரைஸி (Ebrahim Raisi), இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் எதிர்ப்பை சம்பாதித்து வரும் ஈரான், பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வர, இப்ராஹிம் சிறந்த தலைவராக விளங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பி வருகின்றனர்.
ஈரானின் உயரிய தலைவர் அயோடெல்லா அல் கமேனி, அடுத்த மாதம் தனது 82ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக, அவர் அரசியலில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது, ஈரான் ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் இப்ராஹிம் ரைஸி(Ebrahim Raisi), கமேனியை அடுத்து ஈரானின் உயரிய தலைவராகப் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக , அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி, அதன் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க, இப்ராஹிம் ரைசஸி (Ebrahim Raisi)பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இதேவேளை ஈரான் அணு ஆயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், புதிதாக ஈரான் ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள இப்ராஹிம் ரைஸி (Ebrahim Raisi), அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.