வீடு ஒன்றின் மீது மோதுண்ட வாகனத்தில் இருந்த சாரதிக்கு நேர்ந்த விபரீதம்
றொரன்டோவின் பீச்சஸில் வீடு ஒன்றின் மீது மோதுண்ட வாகனத்தில் இருந்த சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கிங்ஸ்வுட் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டுக்குள் மோதுண்ட நிலையில் சாரதி சலமின்றி இருந்தார் எனவும், அவரை மீட்ட தீயனைப்பு படையினர் முதலுதவிகளை செய்ய முயற்சித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த பகுதியில் இருந்த மக்களை தற்காலிகமாக வெளியேற்ற நேரிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
வேகமாக வாகனம் வீட்டில் மோதுண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.