ஹாமில்டனில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 2.1 லட்சம் டொலர் பணம் பறிமுதல்
கனடாவின் ஹாமில்டன் நகரில் மாதங்களாக நடந்துவரும் போதைப்பொருள் கடத்தல் விசாரணையில், போலீசார் வங்கியின் பாதுகாப்பு பெட்டிகளில் இருந்த மொத்தம் 211,000 அமெரிக்க டாலர்கள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விசாரணை ஜனவரி 27ஆம் திகதி பொதுமக்களின் முறைப்பாடுகளின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது.
சந்தேகமான நடவடிக்கைகள் தொடர்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸ் விசாரணை
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி , சார்ல்டன் அவன்யூ கிழக்கு Charlton Avenue East பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு வாகனத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர்.
இதில் 11,000 டொலர் பணம், கோகெயின், பெண்டனில், டிலாவுடிட் மற்றும் ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், TD வங்கிக்கு சொந்தமான இரண்டு பாதுகாப்பு பெட்டி சாவிகள் கைப்பற்றப்பட்டன.
இதனடிப்படையில், ஏப்ரல் 30ஆம் திகதி, ஹாமில்டனில் உள்ள கிங் வீதியில் King Street East கிளையில் உள்ள ஒரு பாதுகாப்பு பெட்டியில் இருந்து 100,000 டொலர் மற்றும் அடுத்த நாள் பென்னல் அவன்யூ Fennell Avenue East கிளையில் உள்ள மற்றொரு பெட்டியில் இருந்து 80,000 டொலர்களும் கைப்பற்றப்பட்டது.
மேலும், மே 28ஆம் திகதி, அதே கிளையில் உள்ள மூன்றாவது பெட்டியில் இருந்து 20,000 டொலர் பணமும் கைப்பற்றப்பட்டது. மொத்தமாக, 211,000 டொலர் பணம் இந்த விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டில் மாரியோ ராபாயல் விஸோச்சி (வயது 53) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நான்கு குற்றச்சாட்டுகள், அதில் மூன்று "விற்பனை நோக்குடன் வைத்திருப்பு" குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.