அதிகாலையில் வேகமாக சென்ற கார்... மரத்தில் மோதி விபத்துக்குள்ளானபோது தெரியவந்த அதிரவைத்த உண்மை
கனடாவில், அதிகாலை 12.41 மணிக்கு வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார்கள் பொலிசார்.
ஆனால், காரை ஓட்டிய நபர் காரை நிறுத்தவில்லை. அது திருடப்பட்ட ஒரு கார் என்பதை அறிந்துகொண்ட பொலிசார், அந்த காரைத் துரத்தியிருக்கிறார்காள்.
Stockton பகுதியைச் சேர்ந்த பொலிசார் அந்த காரை நிறுத்த முயன்றும், காரை ஓட்டியவர் அதை நிறுத்தாமல் சென்றதில் கார் தடுமாறி மரம் ஒன்றின்மீது மோதியுள்ளது.
விரைந்து காரை அணுகிய பொலிசார், காருக்குள் பார்த்தபோது, அந்த காரை ஓட்டியது ஒரு 14 வயது சிறுவன் என்பதையும், அவனுடன் ஒரு சிறுமியும் இருப்பதையும் கண்டுள்ளனர்.
அந்த சிறுமி பொலிசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட, அந்த சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் பொலிசார்.
ஆனால், அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், சிறிது நேரத்தில் அவன் இறந்துபோனதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசரணை மேற்கொண்டு வருகிறார்கள்.