பொருளாதார அதிர்ச்சி சிகிச்சை; அர்ஜென்டினா புதிய ஜனாதிபதி உறுதி மொழி
தென் அமெரிக்க நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைக்க, ‘பொருளாதார அதிர்ச்சி சிகிச்சை’ அளிப்பதாக அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி ஜேவியர் மிலி உறுதியளித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவர் தனது முதல் உரையிலேயே அர்ஜென்டினாவின் புதிய தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜேவியர் மிலி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அர்ஜென்டினாவிடம் பணம் இல்லை என எச்சரித்த மிலி, கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் திட்டத்திற்கு மீண்டும் ஒப்புக்கொண்டார்.
நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 53 வயதான மிலி, பெரும் பொதுக் கடன்களைக் குறைக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஆழமான செலவினக் குறைப்புக்களுடன் ‘பத்தாண்டுகளின் சீரழிவை’ செயல்தவிர்ப்பதாக அவர் கூறினார்.
அதேவேளை அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு உரிமைகளை கட்டுப்படுத்துதல், துப்பாக்கி சட்டங்களை தாராளமயமாக்குதல் மற்றும் காலநிலை மாற்ற மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் மிலி பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.