பெருந்தொற்று காலத்தில் நாளாந்தம் உருவாகிய பில்லியனாதிபதிகள்...
கோவிட் பெருந்தொற்று காரணமாக உலகின் அநேக மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நிலையில், கோடீஸ்வரர்களுக்கு மட்டும் அதிர்ஸ்ட தேவதை அள்ளிக் கொடுத்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் இருந்து இதுவரையில் 573 கோடீஸ்வரர்கள் (பில்லியனாதிபதிகள்) உருவாகியுள்ளதாகவும் இதன்படி உலக பில்லியனாதிபதிகளின் எண்ணிக்கை 2668 ஆக உயர்வடைந்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு முப்பது மணித்தியாலங்களுக்கு ஒரு பில்லியனர் என்ற அடிப்படையில் செல்வந்தர்கள் உருவாகியுள்ளனர்.
உலகின் முதனிலை சஞ்சிகைகளில் ஒன்றான போர்பஸ் சஞ்சிகையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சி.என்.என். செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டாண்டு காலப் பகுதியில் வருமான ஏற்றத்தாழ்வு பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில் வருமான ஏற்றத்தாழ்வு பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெருந்தொற்று காலத்தில் பில்லியனர்கள் தங்களது நிகர வருமானத்தை 3.8 ட்ரில்லியன் டொலர்களினால் அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
பெருமளவான வருமானம் பங்குச் சந்தைகளின் மூலம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.