நாய் உணவை சாப்பிடுபவர்களுக்கு 5 லட்சம் ...இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ள நாய் உணவு போட்டி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓம்னி என்ற நிறுவனம் பல்வேறு நாய்களுக்கான உணவு வகைகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது இந்நிறுவனம் நாய்களுக்காக பிரத்யேகமாக புதிய வகை உணவை உருவாக்கியுள்ளது.
மரவள்ளிக்கிழங்கு, சிவப்பு அரிசி மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உணவை விளம்பரப்படுத்த நிறுவனம் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இந்த புதிய நாய் உணவை தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிடுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.