தொடரும் கனமழை... கனேடிய மாகாணத்தில் மக்கள் வெளியேற உத்தரவு
தொடரும் கனமழை காரணமாக தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அபோட்ஸ்ஃபோர்டின் ஹண்டிங்டன் கிராமப் பகுதி மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகால மீட்புக் குழுக்கள் வெளியேறும் நடவடிக்கைகளுக்கு உதவியாக செயல்படுவதால், குடியிருப்பாளர்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, Tulameen, Similkameen, Coldwater மற்றும் Nicola rivers ஆகிய இடங்களில் பெருவெள்ளம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் ஹோப் மற்றும் பிரின்ஸ்டன் இடையேயான பிரதான சாலை 3 மற்றும் பெம்பர்டன் மற்றும் லில்லூட் இடையேயான பிரதான சாலை 99 ஆகியவை நேற்று மூடப்பட்டன.