மதுபோதையில் இளைஞர்கள் அட்டூழியம்: பரிதாபமாக பறிபோன உயிர்! மட்டக்களப்பில் பெரும் சோகம்
வாழைச்சேனையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தும் வெடி இளைஞர் ஒருவரின் மேல் பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (02) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை ஓமனியாமடு – கல்மடு மலையடிவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என்ற இளைஞரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இளைஞர்கள் குழுவுக்கும் ஓமனியாமடு விஹாரதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது ஒருவரின் வயிற்றில் யானைகளை விரட்டப் பயன்படுத்தும் வெடி பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த விஹாரதிபதி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்க்கட்ட விசாரணையில் மது போதையில் இளைஞர்கள் அட்டுழீயம் புரிந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.