கனடாவில் முக்கிய மீன் பண்ணைக்கு பெருந்தொகை பிழை விதிப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆற்றில் டீசல் கொட்டிய வழக்கில் பிரதான மீன் பண்ணை ஒன்றிற்கு பெருந்தொகை பிழை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Cermaq Canada என்ற மீன் பண்ணைக்கே ஆற்றில் டீசல் கொட்டிய வழக்கில் 500,000 டொலர் பிழை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பு 1.4 மில்லியன் டொலர் பிழை விதிக்க கோரியிருந்த நிலையில், கிரவுன் நீதிமன்றம் 500,000 டொலர் பிழை விதித்துள்ளது.
மேலும், செய்த தவறுக்கு Cermaq Canada முழு பொறுப்பு ஏற்றுள்ளதுடன், அதனால் மீன்களுக்கு பாதிப்பில்லை என்பதும் உறுதி செய்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Campbell ஆற்றுக்கு அருகே 500 லிற்றர் டீசலுக்கும் அதிகமாக கொட்டப்பட்டதாக குறித்த மீன் பண்ணை மீது குற்றம்சாட்டப்பட்டது.
Mitsubishi நிறுவனத்திற்கு சொந்தமான இந்த மீன் பண்ணையில் கடந்த 2017 மார்ச் மாதம் குறித்த சம்பவம் நடந்துள்ளது. பிரதான டாங்கில் இருந்து டீசல் பகிரும் போது இச்சம்பவம் நடந்துள்ளது. ஊழியர்களின் கவனக்குறைவாலையே, டீசல் கொட்டியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
சுமார் 522 முதல் 550 லிற்றர் டீசல் ஆற்றில் படர்ந்தது. இதை சுத்தம் செய்வதற்காக மட்டும் Cermaq Canada நிறுவனம் 885,000 டொலர் செலவிட்டுள்ளது.
ஆனால் இந்த விபத்தில் பண்ணையில் வளர்க்கப்பட்டிருந்த மீன்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.