கனடாவை அச்சுறுத்தும் சளிக்காய்ச்சல் ?
கனடாவில் மீண்டும் சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய மாதங்களில் சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பொதுவாக ஆண்டின் இந்த காலப் பகுதியில் சளிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை குறைவடையும் என்ற போதிலும் இந்த தடவை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் சளிக்காய்ச்சல் கண்காணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ர்ல மாத ஆரம்பம் முதல் வாராந்த சளிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் 8998 சளிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கோவிட் மற்றும் குரங்கம்மை நோய்த் தொற்றுக்களினால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் நிலையில் சளிக்காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.