இரவில் வெளியே நடமாட தடை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு
தென் ஆப்பிரிகாவில் கடந்த நாவம்பர் மாதம் 24 ஆம் திகதி கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்து உள்ளன.
இந்நிலையில் பல வெளிநாடுகள் முன்னெச்சரிக்காக பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருப்பினும் இந்த Omicron வகை புதிய வைரஸ் ஜேர்மனி, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், கனடா உட்பட 20க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் கண்டறிப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஓமிக்ரோன் வைரஸ் ஆற்றல் பற்றி முழுமையான தெரியவர சில வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளதவர்களுக்கு மட்டுமே இரவு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கான உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் Firas Abiad பிறப்பித்துள்ளார்.
இதன்படி டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஜனவரி 9ஆம் திகதி வரை, இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக லெபனானில் கொரோனா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி லெபனானில் 6இலட்சத்து 72 ஆயிரத்து 548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 8ஆயிரத்து 735 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.