இது தண்டனை... கட்டாய தனிமைப்படுத்தலால் கனேடிய மக்கள் வேதனை
அமெரிக்காவுக்கு ஒரு பகல் சென்று திரும்பிய கனேடியர்கள் பலர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் பலரையும் கொதிப்படைய செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஒரு பகல் சென்று திரும்பிய முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடிய மக்கள் பலர், இரண்டு வாரங்களுக்கு பிறகு தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது கனேடிய நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவதாக தாங்கள் உணர்வதாக பலர் கொதிப்படைந்துள்ளனர். கடந்த மாதம் கனேடிய நிர்வாகம் பயணிகளுக்கான விதிகளில் முக்கிய தளர்வை ஏற்படுத்தியது.
அதில், பயணம் மேற்கொண்ட 72 மணி நேரத்திற்குள் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் நாடு திரும்புவதில் சிக்கல் இல்லை. மேலும், கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றுகளும் சமர்ப்பிக்க தேவையில்லை.
கனேடிய நிர்வாகத்தின் இந்த முடிவானது அமெரிக்க எல்லையில் குடியிருக்கும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இருப்பினும், பயணிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரம், பயண நாள், தனிமைப்படுத்தலுக்கான திட்டம் உள்ளிட்ட தகவல்களை ArriveCAN செயலில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஒரு பகலில் அமெரிக்கா சென்று திரும்பிய கனேடிய மக்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தற்போது பெரும்பாலான கனேடிய மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. பலர் தங்களை கனேடிய நிர்வாகம் தண்டிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.