ஈரானில் இருந்து ஏவப்பட்ட நான்கு ட்ரோன்கள் ; சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட நான்கு ட்ரோன்கள் இஸ்ரேலிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு முன்பு கோலன் ஹைட்ஸில் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததால் ஒரு ட்ரோன் இடைமறிக்கப்பட்டது, மற்ற மூன்று ட்ரோன்களும் இஸ்ரேலிய எல்லைகளுக்கு வெளியே சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே ஈரான் மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள 7ஆவது மாவட்டத்தை நோக்கி வெளியேற்ற உத்தரவை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பிறப்பித்த சிறிது நேரத்திலேயே, அங்கு தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த தாக்குதல்களை ஈரானிய ஊடகம் உறுதிபடுத்தியுள்ளது. அதேவேளை, தெஹ்ரானிலும் அதற்கு அருகிலுள்ள நகரமான கராஜ் மற்றும் வடக்கு நகரமான ராஷ்ட்டிலும் பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், வெடிப்புகளைத் தொடர்ந்து தெஹ்ரானில் வான் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலும் ஈரானும் முழுமையான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த முடிவு போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை, குறித்த ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் 12 மணிநேரங்களுக்கு ஈரான் - இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொள்ளும் என கூறப்பட்டது.