மஹிந்த குடும்பம் தலைமையிலான ஊழல் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்து கனடிய நாடாளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரி உரை..!
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்ஷ , பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார்.
இதனை தொடர்ந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீண்டும் தமது அமைச்சர்களை நியமித்த நிலையில் இலங்கையின் அணைத்து மாவட்டங்கள் மற்றும் கிராமங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன நிலையில் ஸ்கார்போறோ பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கனடிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் இன்றைய நிலைமை தொடர்பாக கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அவர் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்ததாவது, இன்று, இலங்கையின் நெருக்கடியான நிதி நெருக்கடி பற்றி ஒரு அறிக்கையை வழங்குகின்றேன்.
ஜனாதிபதியாகவும் , பிரதமராகவும் ஆட்சி புரிகின்ற ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமையிலான ஊழல் ஆட்சி தோல்வியடைந்த நிலையை நோக்கிச் செல்கிறது. மஹிந்த மற்றும் கோட்டாபய மீது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெற்று கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்கின்றன.
இந்த அத்தியாவசிய நிதியுதவியை கொண்டு மனித உரிமை மீறல்களின் ஈடுபட்ட வரலாற்றை
கொண்ட இலங்கை இராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படாமல்
இருப்பது அவசியம்.
சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும், காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான கணக்குகள் இருக்க வேண்டும், தமிழர்களின் உள்ளார்ந்த
உரிமையை அங்கீகரிக்கும் நியாயமான அரசியல் தீர்வு இருப்பதை உறுதி செய்ய
வேண்டும் என தெரிவித்தார்.