பிரபல கால்பந்து அணியில் பலருக்கு புதிய ஓமிக்ரான் தொற்று
புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஓமிக்ரான் தொற்று, பிரபல கால்பந்து கிளப்பின் குழு உறுப்பினர்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போர்த்துகீசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் திங்களன்று தகவல் வெளியிட்ட போர்த்துகீசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், சமீபத்தில் தென்னாபிரிக்காவுக்கு பயணப்பட்ட லிஸ்பனைச் சேர்ந்த பெலனென்சஸ் கால்பந்து அணியில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவரிடம் இருந்து 12 பேர்களுக்கு தொற்று பரவியதாக அடையாளம் கண்டுள்ளனர். எஞ்சிய 12 பேர்களும் தென்னாபிரிக்கா செல்லவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த ஒருவரால் உள்நாட்டில் தொற்று பரவியதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.