புற்று நோய் தொடர்பில் கனேடியர்கள் எதிர்நோக்கும் ஆபத்து ?
கனடாவில் புற்று நோயாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் புற்று நோயின் இறுதிக் கட்டத்தை அடைந்தவர்களாக இருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளாமையே இதற்கான காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக இவ்வாறு பரிசோதனைகள் உரிய முறையில் நடாத்தப்படவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் எண்ண்ணீக்கையில் இறுதிக் கட்டத்தை அடைந்த புற்று நோயாளிகளை அடையாளம் காண நேரிடும் என ஒன்றாரியோவின் கீங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டொக்டர் திமோத்தி ஹான்னா தெரிவித்துள்ளார்.
பரிசோதனை செய்வதற்கும் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கும் நீண்ட காலம் காத்திருப்பதனால் நோய் தீவிரமடையும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என அவ்வர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பீடு செய்யும் போது பரிசோதனை எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது எனவும், தற்பொழுது நிலைமை ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.