டொரண்டோவின் வெப்ப அலை முடிவுக்கு வந்தது
டொரண்டோ மற்றும் ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக வெயிலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக 32 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாகப் பதிவான வெப்பநிலை இன்று குறைந்ததால், கனடாவின் சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்ட வெப்ப எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமையிலும் வெப்பம் மீளக் குறைந்தாலும், 29°C வரை வெப்பநிலை இருக்கலாம். ஈரப்பதத்தை உள்ளடக்கிய நிலையில் உணரப்படும் வெப்பநிலை சுமார் 34 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வாரம் முழுவதும் வெப்பநிலை மேலும் குறைந்து, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முறையே 22 பாகை மற்றும் 26 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வார இறுதியில் சில மழை நேரங்கள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது.
இவற்றையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய ஒளியுடன் கூடிய வானிலை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று வெப்பநிலை மீண்டும் 29 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.