ரொறன்ரோவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! இருவருக்கு ஏற்பட்ட விபரீதம்
ரொறன்ரோவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
டொன் மில்ஸ் மற்றும் கிறீன் பெல்ட் ட்ரைவ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒர் கும்பலொன்று பலவந்தமாக வீட்டுக்குள் புகந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.