இலங்கையைப் போன்று போராட்டங்கள் ஏனைய நாடுகளில் வெடிக்கலாம்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
முறையான அரசாங்க ஆதரவு இல்லாவிட்டால், இலங்கை பாணி போராட்டங்கள் மற்ற நாடுகளில் வெடிக்கலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூகத்தில் ஏழ்மையில் பரிதவிப்பவர்களுக்கு உணவு மற்றும் மின் தேவைக்கான செலவை அரசாங்கங்கள் மானியமாக வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அரசாங்கம் வழங்கும் மானியங்களை மக்களுக்கு நேரிடையாக அளிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
உலக நாடுகளின் அரசுகளுக்கு தற்போது இரண்டு முன்னுரிமை உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர், மிக ஏழ்மையில் தத்தளிக்கும் மக்களுக்கு உரிய ஆதரவை அளிக்க வேண்டும் எனவும்,
போர், தொடர் ஊரடங்கு உள்ளிட்ட காரணிகளால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தொழில்முனைவோருக்கும் அரசாங்கங்கல் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
மேலும், தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் மற்றும் எதற்காக செலவழிக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.