அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய மாணவர்!
அமெரிக்காவில் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்திய மாணவர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25). இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பை படித்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அகில் சாய் தலையில் குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இருப்பினும் அவர் வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் தெலுங்கானாவில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், தெலுங்கானா அரசும் முன் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.