செல்சியாவுக்கு என்ன ஆனது? கனடாவில் பூர்வக்குடி மக்கள் கேள்வி
கனடாவின் வான்கூவரில் காலியான வீடு ஒன்றில் செல்சியா பூர்மன் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த மாத இறுதியில் செல்சியா பூர்மனின் சடலம் வான்கூவரில் காலியான இல்லம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை நண்பகல் சுமார் நூறு பேர் குறித்த இல்லத்தில் ஒன்று கூடி, செல்சியாவுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
செல்சியா பூர்மன் Kawacatoose பூர்வக்குடியை சேர்ந்தவர். சமீபத்தில் தான் வான்கூவரில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில், அவர் மாயமாகி சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது உடல் எச்சங்கள் வான்கூவரில் காலியான குடியிருப்பு ஒன்றில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்டது.
செல்சியாவுக்கு இது போன்ற முடிவு ஏற்பட்டிருக்க கூடாது என பலர் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் பூர்மன் குடும்பம் பொலிஸாரிடம் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது,
குறிப்பாக செல்சியாவின் மரணத்தை சந்தேகத்திற்குரியதாக அடையாளப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வான்கூவர் காவல் துறை கூறியது.
ஆனால் செல்சியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மண்டை ஓடு மற்றும் சில விரல்கள் காணவில்லை என்பதும் அதை உறுதி செய்வதாக கூறியுள்ளனர்.