தென் ஆப்ரிக்காவிற்கு முன்பே நெதர்லாந்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு! சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்
உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி கொண்டு வரும் ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்ரிக்காவிற்கு முன்பே நெதர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது இந்நிலையில் நெதர்லாந்தில் நவம்பர் 19 மற்றும் 23ஆம் தேதி கொரோனா சாம்பிள் சேகரிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு ஒமிக்ரான் தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து மட்டுமின்றி, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியிலும், தென் ஆப்ரிக்காவிற்கு முன்பே ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஒமிக்ரான் வகை கொரோனாவால் உயிரிழப்புகள் நேராத போதும், ஒமிக்ரான் தொற்று பரவும் தன்மை, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை அது மீண்டும் தாக்குமா? என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.