ஒரே இரவில் ரொறன்ரோவை உலுக்கிய மூன்று துயர சம்பவம்
ரொறன்ரோவில் ஒரே இரவில் மட்டும் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரொறன்ரோவில் ஞாயிறு இரவு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஒருவர் இறந்துள்ளார்.
இரவு 11.35 மணியளவில் கிளியர்வியூ ஹைட்ஸில் உள்ள ஒரு குடியிருப்பில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், பலத்த காயங்களால் பாதிக்கப்பட்ட ஒருவரை மீட்க, பின்னர் அவர் சம்பவ இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து கொலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பொலிசார் வரவழைக்கப்பட்டு, விசாரணை அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரே இரவில் மட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் மூவர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.