உயிருடன் நலமுடன் இருக்கும் பிரபாகரன்? வைகோ வெளியிட்ட கருத்து!
தஞ்சையில் இன்று (13-02-2023) காலை செய்தியாளர்களை பழ.நெடுமாறன் (Pazha Nedumaran) சந்தித்த போது பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமுடன் இருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருந்தால் தனக்கு மகிழ்ச்சியே என மதிமுக தலைவர் வைகோ (Vaiko) தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.
என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்றார் வைகோ.
மேலும், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்தத் தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.