சிரியாவில் 2 விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்றைய தினத்துடன் 6-வது நாளாக நீடிக்கிறது.
இவ்வாறான நிலையில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்க பிரித்தானியா விமானம் அனுப்புகிறது.
மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.