பிரான்ஸ் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் இரண்டு முறை இது கட்டாயம்
பிரான்ஸ் நாட்டில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘ஆறாம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு அவதானிப்புக்குரியவர்கள்.
ஏனென்றால் 12 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை” என தெரிவித்த கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer, ‘அவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் திங்கள் முதல் அனைத்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் 10 தானியங்கி பரிசோதனை கருவிகள் அடங்கிய பெட்டி மாணவர்களுக்கு ஐந்து வாரத்துக்கு ஒரு தடவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.