புயலில் சிக்கி விபத்துக்குள்ளான பாரிய சரக்கு கப்பல்: பயணித்தவருக்கு நேர்ந்த நிலை?
கிரீஸில் உள்ள அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6,000 டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சரக்கு கப்பல் லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.
மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.