தாக்குதலை தொடருவோம்... பகீரங்க எச்சரிக்கை விடுத்த பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத்!
எங்கள் குழுவினர் விடுதலை செய்யப்படவில்லை என்றால் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடருவோம் என்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்குகரை பகுதியில் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள்ல், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக மோதல் எகிப்து தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது.
அமைதி ஒப்பந்தம் ஞாயிறுக்கிழமை இரவு 11.30 மணி முதல் அமலுக்கு வரத்தொடங்கியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தின்படி, தங்கள் அமைப்பை சேர்ந்த மூத்த தளபதிகளான ஹலில் அவாவ்டாவை அமைதி ஒப்பந்தம் நடந்த மறுநாளுக்கு உள்ளும், மற்றொரு தளபதியான ஷேக் பாஷிம் அல் ஷாதியை 2 வாரத்திற்கு உள்ளும் இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறையில் உள்ள தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது.
அவ்வாறு விடுதலை செய்யவில்லை என்றால் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடருவோம் என்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.