யாழில் தாய் கண்டித்ததால் தன் உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்
போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக சிறுவன் உயிரை மாய்த்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.
உயிரை மாய்க்க முற்பட்ட நிலை
அதனால் உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அத்தோடு அச் சிறுவன் திங்கட்கிழமை (13) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்