எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதால் மல மலவென பரவிய தீ
கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 80 பேர் காயமடைந்ததோடு 17 பேரின் நிலை என்ன என்பது குறித்து அறியவில்லை.
அத்தோடு அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதோடு அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் நிலையில் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க சர்வதேச நிபுணர்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த தீ மளமளவென அருகிலிருந்த இன்னொரு எண்ணெய் சேமிப்பு கலனுக்கும் பரவியதால் பெரும் சேதம் எற்பட்டது.
மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகைமூட்டம் சூழ்ந்துள்ளதோடு எண்ணெய்க் கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்திற்கு புகை பரவியுள்ளதால் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைக்கும் பணி துரிதப்பட்டுள்ளது.