அமெரிக்கா தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பாவில் Nord Stream எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து நேட்டோ அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று ரஷ்யா கூறியிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயுவை ஏந்திச் செல்லும் அந்தக் குழாயில் கடந்த செப்டம்பர் மாதம் வெடிப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுக்கு ஏற்ப அமெரிக்கக் கடற்படையினர் அந்த எரிவாயுக் குழாயைச் சேதப்படுத்தியதாகப் புதிய செய்தி வெளிவந்திருக்கிறது.
வெள்ளை மாளிகை அந்தச் செய்தியை மறுத்தது. ஸ்வீடனுக்கும் டென்மார்க்கிற்கும் அருகே அந்த எரிவாயுக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. அது வேண்டும் என்றே செய்யப்பட்டதாக அவ்விரு நாடுகளும் கூறின. ஆனால் யார் செய்தது என்று சொல்லவில்லை.
அவசரக் கூட்டம் நடத்தி உண்மையைக் கண்டறியும்படி நேட்டோவை ரஷ்யா கேட்கிறது. ரஷயாவில் இருந்து ஐரோப்பா செல்லும் Nord stream – 1 மற்றும் Nord stream – 2 ஆகிய இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் குழாய்கள் கடலுக்கு அடியே வெடிவைத்து தகர்க்கப்பட்டன இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதே இது அமெரிக்க கடற்படையின் வேலையாக தான் இருக்கும் என பலத்த சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அதை நிருபிக்கும் வகையில் அமெரிக்க தயாரிப்பு வெடிகுண்டு உடைய பாகங்கள் சம்வ இடத்தில் கிடைக்க பெற்றுள்ளதாகவும் மேலும் இந்த தாக்குதலில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் நார்வே கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வை நார்வே நாட்டை சேர்ந்த ப்ளூ ஐ ரோபோட்டிக்ஸ் Blue Eye Robotics நிறுவனத்தின் உதவியோடு மூலமாக நார்வே கடற்படை Nord Stream – 1 எரிவாயு குழாயில் கடலுக்கு அடியே 80 மீட்டர் ஆழத்தில் ரோபோட் அனுப்பி ஆய்வு செய்த போது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் இத்தனை வலுவான தடிமனான குழாய்களை தகர்க்கவோ அல்லது வளைக்கவோ மிகவும் அதிக சக்தி தேவைப்படும் என அந்த ரோபோட் நீர்மூழ்கியின் இயக்குனர் ட்ரான்ட் லார்சன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.