மிஸ்ஸிசாகுவா வாகன விபத்தில் பாதசாரி பலி
மிஸ்ஸிசாகுவாக வாகன விபத்துச் சம்பவத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
எரின் மில்ஸ் பார்க்வே மற்றும் போல்க்வே ட்ரைவ் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள 403ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். வாகன விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்தார் எனவும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தினைத் தொடர்ந்து குறித்த பகுதியின் போக்குவரத்து முடங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.