நடுக்கடலில் 22 மணிநேரம் தத்தளித்துக்கொண்டிருந்த அதிசய மனிதர்!
ஜப்பானில் நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியதால் படகின் என்ஜின் பகுதியை பிடித்துக்கொண்டு உயிர் தப்பிய அதிசய மனிதர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவர் சுமார் 22 மணித்தியாலம் கடலில் அலைந்து தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை (27) அன்று ஜப்பானின் தென் மேற்கு ககோஷிமாவிலிருந்து யகுஷிமா தீவுக்கு பயணித்துக்கொண்டு இருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியதால் அதன் என்ஜின் பகுதியை பிடித்துக் கொண்டு உயிர் தப்பிய அதிசய மனிதராக மாறியுள்ளார். உடனே அவர் அந்த தீவில் இருந்த அவருடைய நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து மீட்புப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒருநாள் வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இறுதியில் அவரை கண்டுபிடித்து பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். அவர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த போதும் பிளாஸ்டிக் ஷீட்டை தன் உடலைச் சுற்றிக்கொண்டு அதன்மூலம் உடலுக்கு தேவையான வெப்பத்தை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடுக்கடலில் படகு மூழ்கத் தொடங்கியதால் அதன் என்ஜின் பகுதியை பற்றிக் கொண்டு உயிர் தப்பிய முதியவரை அதிசய மனிதராகவே பார்க்க வேண்டும் என்றால் அது மிகையல்ல.