ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்!
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ரொறன்ரோவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வென் கிரசன்ட் மற்றும் பிளக்தோர்ன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14ம் மாடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து குறித்து அறிந்து கொண்ட தீயணைப்பு பிடையினர் குறித்த கட்டிடத்திற்குள் நுழைந்து நபர் ஒருவரை மீட்டுள்ளனர்.
இதன் போது குறித்த நபர் சலனமற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.