நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஆணின் சடலம்: பட்டபகலில் சம்பவம்
மிசிசாகா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஆணின் சடலம் ஒன்றை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பீல் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
டிக்ஸி சாலை மற்றும் லேக்ஷோர் சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், சடலத்தை கைப்பற்றியதுடன், மருத்துவ சோதனைக்காக உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையின் பொருட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் விசாரணை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள மக்களிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, உடற்கூராய்வு அதிகாரிகளிடம் இருந்து மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாகவும், அதன் பின்னரே, அடுத்தகட்ட விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.