ஒட்டாவாவில் சீரற்ற காலநிலை குறித்து எதிர்வுகூறல்
ஒட்டாவா நகரில் மார்ச் விடுமுறை ஆரம்பமாகியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் இன்று ஒரே நாளில் பல வகையான பருவகால மாற்றங்களை எதிர்கொள்ளவுள்ளனர்.
ஆரம்பத்தில் 14°C வரை வெப்பம் நிலவினாலும், பிற்பகலில் கடும் புயல் மற்றும் இரவில் பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் ஒட்டாவாவிற்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று, பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை இன்று 14°C வரை உயரும், ஆனால் நள்ளிரவில் திடீரென -8°C ஆகக் குறையும். மழைப்பொழிவு, இன்று பகலில் 15 முதல் 25 மி.மீ மழையும், இரவில் மேலதிகமாக 5 முதல் 10 மி.மீ மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
பனிப்பொழிவு, நள்ளிரவுக்குப் பின்னர் மழை பனியாக மாறும். சுமார் 5 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு மற்றும் கடும் காற்றினால் பனி மூட்டம் (Blowing snow) ஏற்பட வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை: மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான பனிப்பொழிவு (Flurries) ஏற்படலாம். அதிகபட்ச வெப்பநிலை -6°C. புதன்கிழமை: மேகமூட்டம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை -5°C பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.