உரிமை கோரப்படாத பில்லியன் டொலர் பணம்... 9 மில்லியன் கனேடியர்களுக்கு நினைவூட்டல்
கனடாவில் ஏறக்குறைய 9 மில்லியன் மக்களுக்கு அரசாங்கப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது இது தொடர்பில் அவர்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பப் போவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கனடாவின் வருவாய்த்துறை இது தொடர்பில் தெரிவிக்கையில் சுமார் 1.4 பில்லியன் கனேடிய டொலர் தொகை மக்களால் உரிமை கோரப்படாமல் உள்ளது. 1998ல் இருந்தே மக்கள் இது தொடர்பில் எந்த அக்கறையும் முன்னெடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மே மாதம் முடிய, சுமார் 8.9 மில்லியன் மக்கள் தங்களுக்கான பணத்தை அரசிடம் இருந்து பெறாமல் உள்ளனர். குறைந்தது ஒருவருக்கு 158 கனேடிய டொலர் வரையில் கிடைக்க வாய்ப்புள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 25,000 பேர்களுக்கு இது தொடர்பில் நினைவூட்டல் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் மேலும் 25,000 பேர்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும் எனவும், மூன்றாவது கட்டமாக 2023 மே மாதம் நினைவூட்டல் அனுப்பப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறையானது ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களை வரிகள் மற்றும் தள்ளுபடிகளைக் கையாளும் போது, அவை அனைத்தும் அதற்கு உரிமையுள்ள கனேடியர்களிடம் சென்று சேர்வதில்லை.
பெரும்பாலும் உரிய காசோலைகளை தவற விடுகின்றனர், அல்லது முகவரி மாறுவதாக தெரிவிப்பதில்லை, இதனால் வருவாய்த்துறையிடம் இருந்து அவர்களுக்கான தொகை கைப்பற்றப்படாமலே உள்ளது.