தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் கொல்லப்பட்ட ஒரு மில்லியன் கோழிகள்... நான்கு மில்லியன் பேரின் உணவு குப்பையில்
கனடாவில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், ஒரு மில்லியன் கோழிகள் கொல்லப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது. கியூபெக்கில் உள்ள ஒரு இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில், சம்பளம், பணி ஒப்பந்தம் நிரந்தரம் செய்யப்படுதல் முதலான கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆகவே, கோழி தயாரிப்பாளர்கள் தாங்கள் வளர்த்த கோழிகளை இறைச்சி வெட்டும் இடத்துக்கு அனுப்ப முடியாமல் போனதால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின் இறைச்சியை பயன்படுத்த முடியாது என்பதால், சுமார் ஒரு மில்லியன் கோழிகளைக் கருணைக்கொலை செய்துள்ளார்கள்.
இந்த ஒரு மில்லியன் கோழிகள் இறைச்சியானால், நான்கு மில்லியன் பேர் அதை சாப்பிட்டிருக்கமுடியும். இப்படி இறைச்சி வீணாக குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட துயரம் ஒரு புறம் இருக்க, இன்னமும் தொழிலாளர்களுடனான பேச்சு வார்த்தை வெற்றி பெறாததால், வேலை நிறுத்தம் தொடர்வதுதான் சோகம்.