உக்ரைன் படைகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல்! ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா 88 நாளாக தொடர்ந்து போரை நடத்தி வருகின்றது. ரஷ்ய ராணுவத்தின் இந்த கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கில் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் இராணுவம் மீதான இந்த தாக்குதலின்போது கட்டளை மையங்கள், வெடிமருந்து கிடங்குகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் உக்ரைனின் மூன்று கட்டளை மையங்கள், ராணுவ மையங்கள், ராணுவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.