கல்கரியில் புர்கா அணிந்திருந்த தாயாரை அருவருப்பாக திட்டிய நபர்
கல்கரியில் புர்கா அணிந்து தனது பிள்ளைகளுடன் சென்ற இஸ்லாமிய தாயாரை ஒருவர் ஆவேசமாக நெருங்கி அருவருப்பாக திட்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், உடனடியாக கல்கரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நண்பகல் 6 அவென்யூ அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
புர்கா அணிந்து, தமது பிள்ளைகளுடன் சென்ற இஸ்லாமிய தாயாரை, திடீரென்று நெருங்கிய ஒருவர் அருவருப்பாக திட்டியுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின்படி, அந்த நபருக்கு 50 வயதிருக்கும் எனவும், டர்க்கைஸ் நிற சட்டை, மற்றும் வெள்ளை தொப்பி அணிந்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பவப்பகுதியில் இருந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்மணி இதுவரை பொலிசாரை நாடாத நிலையில், அவருக்கும் பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவ வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.