பறிபோகும் நிலையில் அம்பானியின் அன்டிலியா வீடு
இந்தியாவில் வக்பு சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டமையால் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு பறிமுதலாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே பக்ஹிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக இரண்டாவது விலையுயர்ந்த வீடாக இருப்பது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு.
வக்பு வாரிய சீர்திருத்த மசோதா
முகேஷ் அம்பானி இருக்கும் இந்த நிலம், கோஜா சமூகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிறுவனத்திற்கு சொந்தமானது.கரீம் பாய் இப்ராஹிம் என்பவர் இந்த நிலத்தை வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.
ஒரு நிலம் வக்புக்கு கொடுக்கப்பட்டால், அது ஆதரவற்றவர்களுக்கும் வீடுகள் கட்டுதல் பாடசாலை கட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் .
இந்தநிலையில்தான், ஏப்ரல் 2002 இல், கரிம்போய் கோஜா அறக்கட்டளை, முகேஷ் அம்பானியுடன் தொடர்புடைய ஆன்டிலியா கொமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (ACPL) நிறுவனத்திற்கு ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தில்தான் தற்போது அம்பானியின் வீடு அமைந்துள்ளது.
ஏற்கெனவே, இது தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில், வக்ப் வாரியத்துக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்தை தனியாருக்கு விற்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரீம் பாய் அறக்கட்டளை மற்றும் வக்ஃப் வாரியம் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், ஏப்ரல் 5 ஆம் திகதி வக்பு வாரிய சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தமாக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நிலுவையிலிருக்கும் வழக்கை நீதிமன்றம் விசாரித்து, இந்த நிலம் அம்பானிக்குச் சொந்தமில்லை என்று கூறினால் நிச்சயம் அவர்கள் வீட்டை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.