இந்தியர்கள் உட்பட 22 பயணிகள்... மாயமான விமானம் தொடர்பில் வெளியான தகவல்
நேபாளத்தில் 22 பயணிகளுடன் மாயமான தாரா ஏர் 9 என்ஏஇடி விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் போக்கரா நகரில் இருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை கிளம்பிய Tara Air's 9 NAET விமானமானது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.
விமானத்தில் 4 இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தற்போது நேபாளத்தின் மஸ்டங் பகுதியில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நேபாள ராணுவத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி விமானமானது மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ் லாம்சே ஆற்றின் முகப்பில் விழுந்து நொறுங்கியதாக கூறியிருக்கின்றனர்.
சம்பவத்தின்போது பயங்கரமான சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல் வெகுவிரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.