புதிய வகை கொரோனா வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸிற்கு விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான 'ஒமிக்ரான்' என்று பெயராக சூட்டியுள்ளனர்.
இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இப்புதிய வைரஸால் தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது.
மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகளுக்கு ஈடுபடுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.