இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்குள்ளும் நுழைந்த ஒமிக்ரோன் கோவிட் திரிபு தொற்று!
உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வரும் ஒமிக்ரோன் கோவிட் திரிபு இலங்கைக்குள்ளும் நுழைந்துள்ளாக தகவல் வெளிவந்துள்ளன.
ஒமிக்ரொன் கொவிட் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாட்டை வந்தடைந்த போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளை ஆராய்ந்தபோது அவர் ஒமிக்ரொன் திரிபு தொற்று உறுதியானதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார் .
இதே சமயம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.