ஒமிக்ரோன் வைரஸானது பாரிய ஆபத்தை ஏற்படுத்தாது: பிரித்தானிய விஞ்ஞானி தகவல்
உலக நாடுகளை கடந்து இரண்டு வருடங்களாக புரட்டியெடுத்துள்ளது இந்த கொரோனா வைரஸ்.
இந்த நிலையில் அதன் தாக்கத்தில் இருந்தே உலகம் மீளாத சமயத்தில் டெல்டா என்ற புதிய திரிபு உருவானது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்டாவின் புதிய திரிபாக கடந்த சிலதினகளுக்கு முன்பு தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் என்ற வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகின. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாரிய அச்சத்தில் இருந்தன.
மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அந்த வகையில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு குறித்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளதாவது, இது பேரழிவை ஏற்படுத்தாது. மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.